Skip to main content

வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 7 பரிகார முறைகள்.

 

1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவ குறிப்புகள்

  சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

இந்துக்காலக் கணக்கீடு

  இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600 ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21,600 21,600 x 200 43,20,000 ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும். கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள் துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள் கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள் ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள் நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும். 1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் 71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள் 994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம் என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும். 2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்) 2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும். தற்போதையபிரம்மாவின் வயது 51 .

லட்சுமி தேவி நம்மிடமே இருக்க

 புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது. சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்